தனிப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்கப்படவில்லை: மாநகராட்சி விளக்கம்

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: மேயர் அலுவலகத்தில் தபேதார் ஆக பணிபுரிந்து வந்த எஸ்.பி.மாதவி தொடர்ந்து அலுவல் நடைமுறைகளை மீறியும், முறையாக அலுவலகத்திற்கு தகவல் தராமல் தாமதமாக வருதல், அலுவலகத்தில் பணிகளை மேற்கொள்ளாமல் இருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து செய்தது காரணமாக, அலுவலக நடவடிக்கைகளின்படி கடந்த மாதம் குறிப்பாணையின் மூலம் விளக்கம் கேட்கப்பட்டது. இதை தவிர தனிப்பட்ட முறையில் அவரது ஒப்பனை குறித்து எவ்வித விளக்கமும் கேட்கப்படவில்லை, விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் அவரது தனிப்பட்ட ஒப்பனை நடவடிக்கைகளுக்காக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வரப்பெற்றுள்ளது. இது முற்றிலும் தவறானதாகும். அலுவலக நிர்வாக காரணங்களினால் மட்டுமே கடந்த மாதம் மாநகராட்சி நிர்வாகத்தால் மேயர் அலுவலகத்தில் இருந்து, மணலி மண்டல அலுவலகத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

The post தனிப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்கப்படவில்லை: மாநகராட்சி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: