ஜே.பி. நட்டா பேச்சு புதுச்சேரியில் 23 இடத்தில் பா.ஜ. வெற்றிபெறும்

புதுச்சேரி: புதுச்சேரி வந்த பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மலரட்டும் தாமரை- ஒளிரட்டும் புதுவை என்ற தலைப்பில் ஏஎப்டி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய அமைச்சராக இருந்தபோது, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான கடன் ரூ.5 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தார். ஆனால், புதுச்சேரியின் கடனை ஏன் தள்ளுபடி செய்ய முன்வரவில்லை. மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து  துரோகம் இழைத்துள்ளார். முதன்முறையாக பாஜக நாடாளுமன்ற தேர்தலில் நின்றபோது, 272 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று சொன்னோம். அது நடந்தது. நடந்து முடிந்த தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று சொன்னோம்.  அதை செய்து காட்டினோம். அதேபோல் புதுச்சேரியில் வரும் சட்டமன்ற தேர்தலில் 23 இடங்களுக்கு மேல் பாஜக வெல்லும், என்றார்.

Related Stories: