ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு...! 234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராகி வருகிறது: பிரேமலதா பேட்டி

சென்னை: ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டியளித்துள்ளார். சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று பார்க்க கூடாது, இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் பலனில்லை. உடனடியாக அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.

இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராகி வருகிறது. கூட்டணி குறித்த இறுதி முடிவை தேமுதிக பொதுக்குழு, செயற்குழு எடுக்கும். ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று பார்க்க கூடாது. சசிகலா வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மூன்றாவது அணி குறித்து இப்போது கருத்து கூறமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: