சிவகாசி. சிவகாசி டவுன் காவல் நிலையத்திற்கு ரூ.2 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது. சிவகாசி டவுன் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். டவுன் காவல்நிலைய பழைய கட்டிடம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. போதிய இடவசதி இல்லாததால் இன்ஸ்பெக்டர், போலீசார் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தினர். விபத்து மற்றும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல்நிலையம் முன்பு குவிந்திருந்தது. இதனால் காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் உட்கார இடமின்றி சாலையிலும், அருகில் உள்ள பார்க்கிலும் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.