திருவில்லிபுத்தூர்: சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக திருவில்லிபுத்தூர் அருகே பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பான்மையான கிணறுகள் நிரம்பி வழிகின்றன இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்சாபுரம் பகுதியில் உள்ள பெரும்பான்மையான கிணறுகள் நிரம்பி உள்ளன. கிணற்றின் மேல் பரப்பில் நின்று கொண்டு காலை கீழே வைத்தால் கிணற்றுக்குள் விழுந்து விடும் வகையில் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.