காந்தியடிகளின் 74வது நினைவு நாள்: கவர்னர், முதல்வர் துணை முதல்வர் மரியாதை

சென்னை: காந்தியடிகளின் 74வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையின்கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.  இந்த நிகழ்வில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, பென்ஜமின், நிலோபர் கபீல், பாண்டியராஜன், சேவூர் ராமச்சந்திரன், வளர்மதி தலைமை செயலாளர் சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.நடராஜ், வி.என்.ரவி ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர், சென்னை, சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர், முதல்வர்,  துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர்கள் சாந்தி, சண்முகசுந்தரம், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: