தூத்துக்குடி: தூத்துக்குடி தொழிலதிபரிடமிருந்து ஏர்கன் மற்றும் 22 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடி, தாளமுத்துநகர், சமீர் வியாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (50). தொழிலதிபர். இவர் ‘ஏர்கன்’ வைத்திருப்பதாக தாளமுத்துநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தொழிலதிபர் வீட்டில் நேற்றிரவு தாளமுத்துநகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் .22 விட்டம் உடைய ஏர்கன் மற்றும் சுட பயன்படுத்தும் 22 புல்லட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.