சென்னை: சென்னை-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறால் எம்.பி.க்கள் உள்ளிட்ட 129 பயணிகள் 3 மணி நேரம் தவித்தனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. அதில் எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், நவநீதகிருஷ்ணன் உட்பட 129 பயணிகள் செல்ல இருந்தனர். பயணிகள் அனைவரும் இரவு 8.30 மணிக்கு முன்னதாகவே வந்து பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்தையும் முடித்து விட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.