டெல்லியில் திமுக எம்பி டி.ஆர்.பாலு பேட்டி: மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் மோடி: மனசாட்சிக்கு விரோதமாக நடக்கிறார்

சென்னை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி, நிஜத்தில் மனசாட்சிக்கு விரோதமாக மக்களின் மத்தியில் நடந்து கொள்கிறார் என திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறினார். முதல் நாளான நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு திமுக எம்பி டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது: மக்களவையில் திராவிட முன்னேற்ற கழகம் தரப்பில் ஆறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச அனுமதி கேட்டோம். ஆனால், குடியரசுத் தலைவர் பதில் உரை மற்றும் பட்ஜெட் உரைக்கு பிறகே இதுகுறித்து நேரம் ஒதுக்கப்படும். அப்போது பேசலாம் என மக்களவை தலைவர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்து விட்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளலாம் என உறுதியாக இருக்கிறோம். ஆனால், அது ஆளுங்கட்சியின் செயலை பொறுத்தே அமையும். மேலும், பிரதமர் பேசும் அனைத்தையும் நாம் உண்மை என்று எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் பிரதமர், நிஜத்தில் மனசாட்சிக்கு விரோதமாக நடக்கிறார். மக்களின் உணவுக்கு ஆதாரமாக இருக்கும் விவசாயிகள் போராட்ட களத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பனி, குளிர், வெயில் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் லட்சியத்தோடு போராடும் விவசாயிகளை மனிதாபிமான அடிப்படையிலானது பிரதமர் சென்று பார்த்து இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அவர் ஒரு பாறை மனிதராக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: