வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய விஷத்தன்மை மீன்

வேதாரண்யம் : வேதாரண்யம் கடற்கரையில் இறந்த நிலையில் விஷத்தன்மையுள்ள பேத்தை மீன் கரை ஒருங்கியது.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பகுதியில் கோடியக்கரையில் இருந்து நாலுவேதபதி வரை அடிக்கடி இயற்கை சீற்றம், படகுகளில் அடிபடுவது போன்ற காரணங்களால் அரியவகை ஆலிவர் ரட்லி ஆமை, டால்பின்கள் கரை ஒதுங்கி வருகிறது.

சில நேரங்களில் கடல்வாழ் விஷப்பாம்புகள் கூட இறந்து கரை ஒதுங்குவது உண்டு. இந்நிலையில் நேற்று வேதாரண்யம் கடற்கரையில் ஆபத்து காலத்தில் பந்துபோல் (முள்ளம்பன்றி போல்) உருமாறும் அதிக விஷத்தன்மை கொண்ட ஆழ்கடலில் வசிக்கும் பேத்தை மீன் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது.

Related Stories: