பெங்களூரு: மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை பலமாக உள்ளதாக சமூகவளத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, மாநில அரசின் சார்பில் மார்ச் மாதம் தாக்கல் செய்ய வரும் 2021-22ம் நிதியாண்டு பட்ஜெட்டில், சமூகநலத்துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யும்படி முதல்வர் எடியூரப்பாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். சமூகநலத்துறையின் கீழ் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் உள்பட பல பிரிவுகள் உள்ளது. உண்டு, உறைவிட பள்ளிகள் உள்ளது. மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் துறையாகவும் உள்ளதால், வழக்கமாக ஒதுக்கீடு செய்யும் நிதியை காட்டிலும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யும்படி முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளேன்.