மதுரை: அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது பற்றி இப்போது கூற முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேற்று அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறிய கருத்து குறித்து, அதிமுக தேர்தல் குழு முடிவு செய்யும்.