சசிகலாவை கொரோனா பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனையை நிர்வாகம் முடிவு

பெங்களூரு: சசிகலாவை கொரோனா பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனையை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலாவிற்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் அளவு 3 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று காலை முதல் சர்க்கரை அளவு அதிகரித்து வருகிறது. சசிகலாவிற்கு தற்போது ஐசியூ வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: