திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் காக்களூரில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் சி.ஜெரால்டு, செயலாளர்கள் நடுக்குத்தகை ஜெ.ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், மா.ராஜி, ஜி.ஆர்.திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்றார். இதில் இறுதி வாக்காளர் பட்டியலை பிஎல்ஏ 2 மூலமாக ஆய்வு செய்வது, ஜனவரி 25ம் தேதி ஆவடியில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் துணை பொது செயலாளர் ஆ.ராசா சிறப்புரை ஆற்றவுள்ளார். இக்கூட்டத்தில் மாணவரணி மற்றும் திமுகவினர் அனைவரும் திரளாக கலந்துக்கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.