லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர் பற்றி இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலிய அணி இனி சிறந்த அணி இல்லை. முழு பலத்துடன் விளையாடிய ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தி உள்ளது. இனி ஆஸ்திரேலிய அணியுடனான ஆஷஸ் தொடர் முக்கியம் என இங்கிலாந்து அணி நினைக்க வேண்டியதில்லை.