நெல்லை: ‘‘தமிழகத்தில் ெவற்றி வாய்ப்பு, பலப்படுத்துதல், பலவீனமான தொகுதிகள் என ஏ.பி.சி. பிரித்து வெற்றியுள்ள இடங்களில் பா.ஜ. போட்டியிடும்’’ என்று தமிழக தேர்தல் பார்வையாளருமான சி.டி. ரவி தெரிவித்தார். நெல்லையில் நடந்த சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ. தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தேர்தல் பார்வையாளருமான சி.டி. ரவி அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டி, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம். மேலும், ஜனவரி 30, 31ல் தமிழகத்திற்கு பா.ஜ. தேசிய தலைவர் நட்டா வருகிறார்.