அரியலூர்: திருமானூர் அருகிலுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கரைவெட்டி பரதூர் கிராமத்தில் 1100 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்திலேயே மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகவும், பறவைகள் சரணாலயமாகவும் உள்ளது. இந்த கரைவெட்டி பறவைகள் சரணாலயமாக 1998 ல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்னும் அரியலூர் மாவட்ட மக்களில் பலருக்கு கரைவெட்டி பறவைகள் சரணாலயம் இருப்பதே அறியாத நிலை தான் உள்ளது. எனவே அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் வரவழைக்கும் வகையில் வந்து செல்லும் வகையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.