மதுரை: மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது. மதுபானங்களை, அதிக விலைக்கு விற்கும் விற்பனை பிரதிநிதிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுபானங்கள் விற்பனை குறித்து உரிய விதிமுறை, நீதிமன்ற உத்தரவு அவை முநையாக பின்பற்றபடவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டது. விதிமீறியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.