புதுச்சேரி: புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தன்னுடைய துறை ரீதியாக நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி அனுமதி வழங்க கோரி கடந்த 10ம் தேதி முதல் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். நேற்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்து கந்தசாமியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடாவடி போக்கால் மக்கள் சிரமப்படுகிறார்கள்.