சென்னை காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னம் முதல் கலங்கரை விளக்கம் வரை குடியரசு தின ஒத்திகைக்காக வரும் 20 - 24 தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் வருகின்ற ஜனவரி 20, 22, 24, 26 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; வரும் 20, 22, 24, 26 உள்ளிட்ட 4 நாட்களில் காலை 6-10 மணி வரை வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது. மேற்கண்ட 4 நாட்களுக்கு கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1) மேற்கண்ட தினங்களில் காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 06.00 மணிமுதல் 10.00 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

2) அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, வி.கே. ஐயர் சாலை, தேவநாதன்

சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீக்கிரீஸ் சந்திப்பு, மியுசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

3) அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உட்பட) சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில் கச்சேரி சாலை நோக்கி

திருப்பப்படும். அவைகள் கச்சேரிசாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீக்கிரீஸ் சந்திப்பு, மியுசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

4) டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் காந்திசிலை நோக்கி செல்லும் மாநகர பேருந்துதடம் எண். 27-D இராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம்.தெரு சந்திப்பில் இராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருப்பி

விடப்பட்டு, அவைகள் வி.எம். தெரு, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்கு கெனால்பேங்க் ரோடு, சீனிவாசாபுரம் வழியாக பட்டினப்பாக்கம்

சென்றடையலாம்.

5) அதேபோன்றுமயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்திசிலை நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் எண். 21-G இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி

விடப்பட்டு, அவை இராயப்பேட்டை மேம்பாலம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

6) அதே போன்று மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணாசதுக்கம் நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் எண். 45-B மற்றும் 12-G ஆகியவை  நீக்கிரீஸ் சந்திப்பு, மியுசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணாசதுக்கம் சென்றடையலாம்.

7) டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் காந்திசிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பில் டாக்டர் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

8) டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.

9) டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.

10) பாரதிசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும்.

11) வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். மாநகர பேருந்துகள் கெனால் சாலை சந்திப்பு

வரைஅனுமதிக்கப்படும்.

12) அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகைஅருகில் மாற்றப்படும்.

13) பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்க பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜாஅண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணாசிலை, அண்ணாசாலை, அமெரிக்க தூதரகம் சர்வீஸ் ரோடு, கதீட்ரல்சாலை, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, காரணீஸ்வரர் பகோடா தெரு, சாந்தோம்

சாலைவழியாக அடையாறு சென்றடையலாம்.

14) வாலாஜாபாயிண்ட் மற்றும் அண்ணாசாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள்வரஅனுமதியில்லை. இவ்வாறு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாரும் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories: