சேலம்: தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் இரும்புக்கம்பி டன்னுக்கு 20 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, சேலம், காஞ்சிபுரம், கோவை, ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் கட்டுமானத்திற்கு தேவையான இரும்புக்கம்பிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் உற்பத்தியாகும் இரும்புக்கம்பிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு டன் இரும்பு கம்பி ₹45 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக, கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வால் கட்டுமான பணிகள் சுறுசுறுப்படைய தொடங்கியது. இதன் காரணமாக இரும்புக்கம்பியின் விற்பனையும் அதிகரிக்க தொடங்கியது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஒரு டன் கம்பிக்கு 2 ஆயிரம் அதிகரித்து 47 ஆயிரத்திற்கு விற்றது.