சென்னை:பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பாஜ தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வந்தார். அதன்பின்னர் சென்னை மதுரவாயலில் நடைபெற்ற பாஜவின் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார் நட்டா. அப்போது தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் ஜே.பி. நட்டா. பின்னர் அவர் பேசுகைளில், நம்ம ஊரு பொங்கல் என்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ்நாடு ‘பக்தி’ பிரதேசமாகும். மதத் தலைவர்கள் மற்றும் புனிதர்களால் மத உணர்வுகள் பாதுகாக்கப்பட்ட ஒரு இடம் இது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற ஆன்மிகவாதிகள் பக்திக்கும் ஆன்மிகத்திற்கும் நிறைய பங்களிப்பை தந்துள்ளனர்.