குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம்: தமிழக அரசை கண்டித்து அதிமுக மாஜி அமைச்சர் தர்ணா: ராமநாதபுரத்தில் பரபரப்பு

ராமநாதபுரம்:ராமநாதபுரம், வண்டிக்கார தெருவில் முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான மணிகண்டன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன் வண்டிக்கார தெருவில் பாதாளச் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கியது. தற்போது பெய்து வரும் மழையால், கழிவுநீர் வீடுகளுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் கழிவுநீரை அகற்றவும், சாக்கடை உடைப்பை சரி செய்யக் கோரியும் நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கழிவுநீரை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான மணிகண்டன், நேற்று காலை வண்டிக்கார தெருவில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த நகராட்சியினர் கழிவுநீர் அகற்றும் வாகனம் மூலம்  தண்ணீரை அகற்றினர்.  மேலும் அப்பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் தெளித்தனர். இதனால் 2 மணி நேரமாக எம்எல்ஏ நடத்திய போராட்டம் முடிவிற்கு வந்தது.

Related Stories: