நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக நகர துணை செயலாளர் நியமனம்

தாம்பரம்: தாம்பரம் அதிமுக நகர செயலாளராக கூத்தன் இருந்து வருகிறார். மேலும் நகர துணை செயலாளராக கிருஷ்ணமூர்த்தி இருந்து வந்தார். இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்து விட்டதால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. எனவே இந்த பதவிக்காக தாம்பரம் நகர அதிமுகவை சேர்ந்த பலர் பல வழிகளில் முயற்சி செய்து வந்தனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் தற்போது தாம்பரம் நகர அதிமுக துணை செயலாளராக சேலையூர் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: