சொல்லிட்டாங்க...

* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளை பாதுகாக்க தொடங்கப்பட்ட பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்தில் 5 ஆண்டில் கோடிக் கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். - பிரதமர் நரேந்திர மோடி

* மாநில அரசுடன் கலந்து பேசாமல் தன்னிச்சையாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றிவிட்டு, இப்போது நீதிமன்றம் கருத்து கேட்பது என்பது கண்துடைப்பு நாடகம். - இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்

* பொங்கல் பரிசு அரசு பணமா அல்லது ஆளுங்கட்சி பணமா என தமிழக மக்களுக்கு தெரியாமல் இல்லை. மூழ்கிய கப்பல்தான் அதிமுக - பாஜ கூட்டணி. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

* நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணமான அதானி குழுமம், விவசாயிகளோடு நில்லாமல் மீனவர்கள் வயிற்றில் அடிப்பதற்கும் முனைப்பு காட்டுகிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories: