திருவள்ளூர்: பொங்கல் பண்டிகை வழிபாட்டின்போது மஞ்சள் கொத்து, தித்திக்கும் செங்கரும்பு, காய்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள் அனைத்தும் வைத்து பூஜை செய்வர். இதையொட்டி, ஒரு ஜோடி செங்கரும்பு ரூ.80 முதல் ரூ.100 வரை நேற்று விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மஞ்சள் கொத்து சிறியது ஒரு ஜோடி ரூ.30, பெரியது ரூ.50, கலர் கோலப்பொடி கிலோ ரூ.50, 50 கிராம் பாக்கெட் ரூ.10க்கும் விற்றது. பொங்கலுக்கு முக்கிய உபகரணமான மண் பானை குறைந்தபட்சம் ரூ.80 முதல் அதிகபட்சம் ரூ.200 வரை விற்கப்பட்டது.