சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்காக தமிழக அரசிடம் ரூ.621 கோடி கேட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும். இதனால் தேர்தல் பரப்புரை பணிகளில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கு ரூ.621 கோடி செலவாகும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.