சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 2017-18ல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு இதுவரை இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், உடனடியாக வழங்கக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று காலை சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடந்தது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அமைச்சர் பாஸ்கரன் வெளியே வந்தார்.