பானை, கரண்டி, பச்சரிசி, வெல்லம் விராலிமலை தொகுதி மக்களுக்கு பொங்கல் சீர்: அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுகவினர் நேற்று நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு ‘நம்ம விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர்’ என்று அச்சிடப்பட்ட பரிசு பையை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். இதில் பித்தளை பொங்கல் பானை, கரண்டி, பச்சரிசி, வெள்ளம், பாசிபருப்பு, நெய் மற்றும் பொங்கல் வைக்க தேவையான அனைத்து பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் இருந்தன. விராலிமலை தொகுதியில் திடீர் என பொதுமக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பொங்கல் சீர் தொகுப்பை வழங்கிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: