சென்னை: சாதியைப் பார்த்து வாக்களிக்காதீர்கள், சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் கட்சிகளுக்கு இடையேயான போர் அல்ல. நேர்மைக்கும் ஊழலுக்கும் இடையே நடக்கும் போர். இதில் மக்கள் நேர்மையின் பக்கமே இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.