டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96-ஆக உயந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து வந்த மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ், சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ், 70 சதவீதம் அதிவேகமாக பரவக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் அலை தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் புதிய வகை தொற்று பரவியுள்ளது.