தைப்பொங்கலை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்கள் சதுரகிரி செல்ல அனுமதி

வத்திராயிருப்பு: தைப்பொங்கலை முன்னிட்டு இன்று முதல் 14ம் தேதி வரை 5 நாட்கள் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மாலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.10) முதல் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் மார்கழி மாத அமாவாசை என்பதால் பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 14ம் தேதி தைப்பொங்கல் வரை 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரிக்கு செல்லலாம். மேலும் ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பொரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்துள்ளனர். மலையில் தொடர்ந்து பெரிய அளவில் மழை பெய்து ஓடையில் அதிகளவு தண்ணீர் வந்தால் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Related Stories: