வத்திராயிருப்பு: தைப்பொங்கலை முன்னிட்டு இன்று முதல் 14ம் தேதி வரை 5 நாட்கள் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மாலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.10) முதல் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் மார்கழி மாத அமாவாசை என்பதால் பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.