புதுடெல்லி: உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்ததும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. தனிநபர் பாதுகாப்பு என்ற பெயரில் சமீபத்தில் அது வரிசையாக கொண்டு வந்துள்ள பல கடுமையான புதிய விதிமுறைகளால், அதை பயன்படுத்தும் பயனாளர்கள் மிகுந்த சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். வாட்ஸ்அப்பின் புதிய விதிமுறைகளின்படி, பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றவர்களுக்கு பகிரப்படும். இந்த விதிமுறையை ஏற்றுக் கொண்டதாக வாட்ஸ்அப்புக்கு ‘ஓகே’ போட்டால் மட்டுமே, அதன் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இல்லாவிட்டால், கணக்கு முடக்கப்படும். எனவே, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற ஆப்களுக்கு மாறத் தொடங்கி உள்ளனர்.