நாகை: நாகையில் எஸ்பி மற்றும் நீதிபதிகள் முகாம் அலுவலகம் அமைந்துள்ள புதிய கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் பைக் ரேசில் செல்லும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். நாகை புதிய கடற்கரை செல்லும் சாலையில் எஸ்பி முகாம் அலுவலகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு, திட்ட இல்லம், சுற்றுலா மாளிகை, அரசு அலுவலர்கள் வசிக்கும் ஹவுசிங்யூனிட் என நிறைந்து உள்ளது.
மேலும் புதிய கடற்கரைக்கு இந்த சாலை வழியாகவே பெண்கள் மற்றும் குழந்தைகள் நடந்து செல்வார்கள். சிலர் குடும்பத்தோடு வாகனங்களில் செல்வார்கள்.