லண்டன்: லண்டனில் உள்ள சலூன் கடையில் கொரோனா விதிகளை மீறிய நடிகை பிரியங்கா ேசாப்ராவை அந்நாட்டு போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர். இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், தொற்று பரவாமல் தடுப்பதற்காக பெண்களின் முடி அழகு மையம், டாட்டூ பார்லர்கள், ஸ்பாக்கள், மசாஜ் பார்லர்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இந்திய பாலிவுட் திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸுடன் லண்டனில் வசித்து வருகிறார். ஹாலிவுட் படங்களிலும் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இந்நிலையில், அங்குள்ள சலூன் கடைக்கு சிகை அலங்காரத்திற்காக பிரியங்கா சோப்ரா சென்ற போது, அங்கு அவர் கொரோனா விதிகளை மீறியதாக புகார் எழுந்தது.