விழுப்புரம், :விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசாரத்தை தொடங்கி வைத்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது.
தமிழகத்தில் கடந்த நவம்பர் 19ம்தேதி முதல் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசாரத்தை தொடங்கி மாவட்டம் தோறும் நான் பேசி வருகிறேன். இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. எனவே இளைஞர்கள் அதிகம் உழைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் சென்று அதிமுக ஆட்சியின் அவலங்களையும், வேதனைகளையும், திமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும் பேசி வருகிறேன