விஸ்வரூபம் எடுக்கும் உருமாறிய கொரோனா: மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி; 82-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 71 பேர் உருமாறிய கொரோனா வைரசால் பாதிப்பு இருந்த நிலையில் இன்று மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் புனே, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் புதிய வகை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

வைரஸ் உறுதியான 82 நபர்களும் அந்தந்த மாநில அரசுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவர்களுக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

Related Stories: