டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 71 பேர் உருமாறிய கொரோனா வைரசால் பாதிப்பு இருந்த நிலையில் இன்று மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் புனே, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் புதிய வகை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.