வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களின் போராட்டத்திற்கு பொறுப்பேற்று அமெரிக்க வெள்ளை மாளிகை இணை ஊடக செயலாளர் சாரா மேத்யூஸ் உள்ளிட்ட 3 முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரில் சாரா மேத்யூஸ் வெளியிட்டுள்ள பதிவில் டிரம்ப் நிர்வாகத்தில் பங்கேற்று கொள்கைகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்து வந்ததில் மிகவும் பெருமை அடைவதாகவும், நாடாளுமன்றத்தில் சிலரது மோசமான நடவடிக்கையினால் தற்போது தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு பொறுப்பேற்று தனது வெள்ளை மாளிகை இணை பத்திரிக்கை செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.