கொல்கத்தா: நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சிகிச்சைக்கு பின் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என உட்லேண்ட்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சவுரவ் கங்குலி 2ம் தேதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே மருத்துவமனை தெரிவித்து இருந்தது.