திருச்சி வானொலி நிலையத்தில் விவசாயிகள் முற்றுகை

திருச்சி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலதலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி கன்டோன்மென்ட் அருகில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராகவும், 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். அப்போது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த ராஜகோபால் (81) என்ற விவசாயி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: