பெங்களூரு: முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, எச்.டி.குமாரசாமி ஆகியோர் கர்நாடகவின் கோமாளிகள். மக்கள் இவர்களை கோமாளிகளாக தான் பார்க்கின்றனர் என்று பா.ஜ. மேலவை உறுப்பினர் எச். விஷ்வநாத் தெரிவித்தார்.
பெங்களூருவில் எம்.எல்.ஏக்கள் பவனில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக எச். விஷ்வநாத் கூறியதாவது: ``மாநில அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து யாரும் எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது. கட்சி மேலிடம் எப்போது அனுமதி வழங்குகிறதோ அப்போது அது நடக்கும். இதனால் தினமும் இது தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். நான் மூத்தவனாகவும், என்னுடைய அனுபவத்தின் ஆதாரத்தின் மீது தெரிவிக்கிறேன்.