புதுடெல்லி: தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்களும், மாற்று திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்திய தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், ‘வெளிநாடுவாழ் இந்தியர்களை ஆன்லைனில் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பும் இணைப்பில் (லிங்க்) அவர்கள் எந்த நாட்டில் இருந்தும் தங்களின் வாக்கை செலுத்தலாம்.