காரியாபட்டி : காரியாபட்டி அருகே மழையால் சேறும், சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே டி.கடம்பன்குளம் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இங்குள்ள தெருச்சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளது. நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை பதம் பார்த்து வருகிறது.