சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வந்த நடிகர் சுதீப்புடன் செல்பி எடுக்க குவிந்த ரசிகர்கள்

மைசூரு: சாமுண்டீஸ்வரி மலையில் சாமி தரிசனம் செய்ய சென்ற கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப்புடன் செல்பி எடுத்துக் கொள்ள ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மைசூருவில் புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி மலைக்கோயில் உள்ளது. இங்கு சாமுண்டீஸ்வரி தேவியின் தரிசனம் செய்ய பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருவதுண்டு.   இந்நிலையில் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் ரசிகர்களை பெற்றிருப்பவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தற்போது ரங்கிதரங்கா என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதையடுத்து இப்படத்தின் இயக்குனர் அனூப் பண்டாரி உடன் சுதீப் மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று அம்மனின் தரிசனம் செய்தனர். அப்போது நடிகர் சுதீப் கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இதையடுத்து அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள ரசிகர்கள் முண்டியடித்தனர். கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட சுதீப்பை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

Related Stories: