புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த புவனேஷ் குப்தா(59) மற்றும் அவரது மகன் விவேக்(34) ஆகியோர் கடந்த 30 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வருகின்றனர். இவர்கள் டெல்லி உத்தம்நகரில் நகை கடை ஒன்றை நடத்தி வந்தததோடு, பல்வேறு முதலீட்டு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர். மதலீட்டு திட்டங்களில் சேர மக்களை ஈர்ப்பதற்காக அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தி டிவி, பிரிட்ஜ் போன்றவற்றையுயம் வழங்கி வந்துள்ளனர்.
குறிப்பாக, மோகினி எண்டர்பிரைசஸ் என்கிற பெயரில் இவர்கள் நடத்திய முதலீட்டு திட்டங்களில் முதலீட்டார் ஒருவர் மாதம் 3,000 செலுத்த வேண்டும். இரண்டாவது திட்டத்தில் முதலீட்டாளர் மாத மாதம் 75,000 பணத்தை தொடர்ந்து 20 மாதங்களுக்கு கட்ட வேண்டும். இறுதிமாதம்வரை குலுக்கலில் பரிசு கிடைக்காதவர்களுக்கு நகைகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு லக்கி டிரா ூலம் கார், பிரிட்ஜ் மற்றும் வாசிங்மெசின் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.