தங்கவயல்: தங்கவயல் தாலுகா கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ சார்பு உறுப்பினர்களுக்கு , தொகுதி எம்.பி.எஸ்.முனிசாமி தலைமையில் பாராட்டு விழா நடந்து. பேத்தமங்கலம் திருமண மண்டபத்தில் நடந்த இந்த பாராட்டு விழா கூட்டத்தில் எம்.பி.எஸ்.முனிசாமி வெற்றி பெற்ற கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசும் போது, பா.ஜவிடம் பணபலம் இல்லை என்றாலும் மக்கள் ஆதரவு, கட்சி தொண்டர்களின் அயராத உழைப்பு ஆகியவற்றால் 198 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கிராம உள்ளாட்சி தான் நாட்டின் அடித்தளம். நமக்கு வாக்களித்தவர் மற்றும் வாக்களிக்காதவர் என் அனைத்து மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய சாதி, மத, பேதமின்றி பணியாற்ற வேண்டும்.