புதுடெல்லி: அமேசான், பிளிப்கார்ட் போல முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான அலிபாபா நிறுவன தலைவர் ஜாக் மா(56). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன அரசாங்கம், வங்கிகள் மற்றும் அவற்றின் அணுகுமுறை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால், அலிபாபா நிறுவனம் மீது அரசு ஏகபோக எதிர்ப்பு விசாரணையை அறிவித்தது. மேலும் ஜாக் மா நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்தது. இந்நிலையில் தொழிலதிபர் ஜாக் மா திடீரென மாயமாகி உள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக அவர் பொது வெளியில் தோன்றவில்லை.