மதுரை: டாஸ்மாக் விற்பனை பணத்தை தாமதமாக செலுத்தியதற்கு வட்டியும், ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டுமென்ற நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது. மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த அழகர்சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக உள்ளேன். மது விற்பனை பணத்தை மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கம். கொரோனா பரவலால் மார்ச் 24ல் மாலை 6 மணிக்கு கடை மூடப்பட்டது. அப்போது, மாலை 4 மணி வரையிலான விற்பனை பணம் மறுநாள் வங்கியில் செலுத்தப்பட்டது. மாலை 4 முதல் 6 மணி வரை நடந்த விற்பனை பணம் பாதுகாப்பு பெட்டியில் வைக்கப்பட்டது. மறுநாள் கடையில் இருந்த மதுபானங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. அப்போது மதுபான இருப்பு சரிபார்க்கப்பட்டு 4 மணி முதல் 6 மணி வரையிலான பணம் வங்கியில் செலுத்தப்பட்டது. இந்த நடைமுறை தான் அனைத்து மதுபான கடைகளிலும் பின்பற்றப்பட்டது.