டெல்லி: அவசர கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவிஷீல்டு மருந்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக நிபுணர் குழுவுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது.