புதுடெல்லி: லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீற முயன்றதால் கடந்த ஜூன் முதல் இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், தனது நாட்டு துறைமுகத்துக்கு வந்த 2 இந்திய சரக்கு கப்பல்களை சீனா சிறைபிடித்து வைத்துள்ளது. எம்பி ஜெகன்நாத் என்ற சரக்கு கப்பல் சீனாவின் ஜிங்தாங் துறைமுகத்தில் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நிறுத்yக்தப்பட்டுள்ளது. இதில், 23 இந்திய ஊழியர்கள் இருக்கின்றனர். இதேபோல், எம்வி அனஸ்தாசீயா என்ற கப்பலும், காபீடியன் துறைமுகத்தில் நிற்கிறது. இதில், 16 இந்திய ஊழியர்கள் இருக்கின்றனர். இக்கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்கவும் சீன அரசு அனுமதி அளிக்கவில்லை.